ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இனியது என்பது...
இருப்பது மட்டும் அல்ல...
நினைப்பதும் தான்...

கடந்த 2009 ம் ஆண்டு துவக்கத்தில் வலைபதிவு எழுத வேண்டும் என ஆரம்பித்த நான்.. ஆரம்பத்தில் எழுதிய பதிவு விவசாய செய்திகள்... வலை உலவி மையத்திற்கு சென்று எழுத வேண்டிய நிலை தொடர்ந்து எழுத முடியவில்லை...
சொந்த கணினி வாங்கி எழுத நினைத்தது 2009 மார்ச்... கிராமம் என்பதால் என் பகுதியில் இணைய இணைப்பு இல்லை.. கிடைப்பதில் கால தாமதம். ஜூலை மாதத்தில் கிடைத்தது. அதுவும் வில் தொலைப்பேசி மூலமாக... சரி என என் கனவான தமிழ் வேளாண்மை தளத்தினை ஆகஸ்ட் 10 அன்று துவக்கிட இணையப் பெயர் பதிவினை செய்தேன். சரி நமக்கு என ஒரு வலை பூ வேண்டும் என செப்27 ல் கற்றது கைமண்ணளவு எனும் இந்த வலைபூ வினை எழுத ஆரம்பித்தேன். தினசரி ஏதாவது எழுத நினைப்பேன். ஆனால்.. வேளாண் தள பணிச்சுமையால் இன்று வரையிலும் தினசரி எழுத வேண்டும் என்ற எண்ணம் நடைமுறைக்கு வரவில்லை... நான் இந்த வலைபூவினை துவக்கிய நாளில் என்னைப் பற்றி எழுதிய வரிகளை இந்த இணைப்பில் காணலாம்... http://www.ssvl.in/2009/09/blog-post.html

இதோ அன்று நான் எப்படி... இன்று நான் எப்படி...

இதோ இன்று என்னைப் பற்றி மீண்டும் ஒரு முறை இன்றைய நாளில் நான் ..

நான் சக்திவேல்..

நான் சக்திவேல்... யார் கேட்டாலும் இப்படிச் சொல்லிப் பழகியது இன்று பெயரோடு ஒட்டிக்கொண்டது..



நான் முட்டாள்..

புனைப்பெயர்... பெரிய கவிஞனும் அல்ல... பெரிய எழுத்தாளனும் அல்ல... ஆனாலும் குழுமத்தில் மடல்கள் இட எனக்கு ஒரு புனைப்பெயர் தேவைப்பட்டது..
எனக்கு நானே வைத்தும் கொண்டேன்... நான் முட்டாள்.....



படிப்பு....

அன்றும் பத்து.. இன்றும் பத்து... என்றும் பத்து....
ஆமாமுங்க... இனியா படிக்கப் போறோம்... நம் எண்ணங்களை மற்றவர்கள் படிக்க நாம் நடந்தால் போதும் இனி வரும் காலங்களில்....


தொழில்...

அப்போ... பத்திரிகை செய்தியாளர் ..
இப்போ... பத்திரிகையாளர்... சமூக ஆர்வலர்...


கடந்த ஒரு வருடம்...பற்றி..

கடந்த ஒரு வருடம் மட்டும் அல்ல... பொது வாழ்வில் நாட்டம் எனக்கு சமூக ஆர்வம் உண்டு,, என பத்திரிகைப் பணிக்குள் பிரவேசித்த கடந்த 10 வருடங்களில் பலரின் அறிமுகங்கள்... பலரின் எண்ணங்களையும் அறியும் வாய்ப்பு...

ஆனாலும் கடந்த வருடம்