திங்கள், 26 ஏப்ரல், 2010

அரசியல்வாதிகளின் அருமையான பொழுதுபோக்கு.. பொது வேலை நிறுத்தம்

அடேங்கப்பா... நாளைக்கு வேலை நிறுத்தமாம் ... நாடு தழுவிய வேலை நிறுத்தமாம்... இதனால் யாருக்கு என்ன இலாபம்...

சரி இதைப்பத்தி பேசும் முன் எதற்கு இந்த வேலை நிறுத்தம்... ?
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாளை நடத்தும் பொதுவேலை நிறுத்தமாம் இது?

சரி இந்த விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்? அரசாளும் அரசியல் வாதிகளா?
ஆம் என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது... காரணம் அரசாளும் அரசியல்வாதியால் மட்டும் அல்ல இதுவரை அரசாண்ட அனைத்து அரசியல் வதிகளுமே தான் இதற்கு காரணம்...

ஆம் சரியான பொருளாதார கொள்கை மட்டும் ஒரு நாட்டில் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்திவிடாது....

முதலில் ஒருவர் மேலே குறை சொல்லும் பழக்கத்தினை நம் அரசியல் வாதிகள் என்று தான் நிறுத்துவார்களோ...!

இன்று ஆட்சியில் இருப்போர் விலைவாசி உயர்வுக்கும் , மின்வெட்டிற்கு காரணம் சொல்வர்... அதே இன்று நாடாளும் அரசியல்கட்சி எதிர்கட்சியாய் மாறும் போது ...? இந்த மாதிரியான நிலை வரும் போது என்ன சொல்லும்... அதற்கான காரணத்தினையா சொல்லும்...இன்று எதிர்கட்சிகள் சொல்லும் இதே வார்த்தைகளை தான் சொல்லும்... இல்லை... இல்லை... சொல்லியவர்கள் தான் இவர்கள்... இவர்களின் பொழுதுபோக்கிற்கு கிடைத்த விளையாட்டு மைதானம் நாளை பொதுமக்களுக்கு இடையுறாக ஒரு பொது வேலை நிறுத்தம் அறிவித்து அறிக்கை விடுவது..

என்ன காரணம் கிடைக்கும் எப்போது குறை காணலாம் எப்படி ஆட்சியை கலைக்கலாம்... எப்படி நாம் ஜெயிக்கலாம்... 500 தரலாமா? இல்லை ஓட்டுக்கு 1000 தரலாமா? .. நாம் எப்படி கல்லா கட்டுவது என யோசிப்பதும்... இடை இடையே சலிப்பு ஏற்படும் காலங்களில் இப்படி பொது வேலைநிறுத்தம் அறிவிப்பதுமே இவர்களுக்கு வேலையாகப் போனது..

விலைவாசி மட்டும் தான் ஏறியதா? நன்றாக யோசிக்க வேண்டும்.... கிராமத்தில் 40 ரூபாய் ஊதியம் வாங்கியன் இன்று தினம் 400 சம்பாதிக்கும் நிலை... இந்த ஊதிய உயர்வுதான் இன்றைய விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள தயாரா?

இது தான் உண்மை... எங்கோ வேலைவாய்ப்பு இல்லை என்பதற்காக எல்லா பகுதிகளிலும் ஊரக வேலைவாய்ப்பினை அளித்த அர்சின் செயலும் இந்த விலைவாசிக்கு காரணம் ... அதற்காக இந்த பொது வேலைநிறுத்தம் செய்கின்றனர் எதிர்கட்சிகள் என்று காரணம் சொன்னால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது... காரணம் இன்று எதிர்கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள்...

மக்களை முட்டாள்களாகவும்,சோம்பேறிகளாகவும் மாற்றிய இந்த அரசியல்வாதிகள் பற்றி என்ன சொல்ல?

சில வருடங்களுக்கு முன்பு கிராமத்தில் கூலி ஆட்களுக்கு ஊதியம் ரூபாய் 40 ... ஆனால் இன்று குறைந்த பட்சம் ரூபாய் 150... கேட்டால் விலைவாசி உயர்வு சம்பளம் கட்டாது சேர்த்து வாஞ்குறோம்னு சொல்வாங்க... இதே நிலைதான் எல்லா இடங்களிலும்... நாங்கள் ஆட்சியில் இருந்த போது விலைவாசி இந்த அளவுக்கு உயரவில்லை... என சொல்லும் அரசியல்வாதிகள் அன்றைய மக்களின் வருமானத்தினையும் இன்று மக்களின் வருமானத்தினையும் ஒப்பிட்டு பார்த்திருந்தால் .. இப்படி பேச மாட்டார்கள்...

கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் விலைவாசி உயர்வு என்பது இருமடங்கு மட்டுமே...
ஆனால்... ஊதிய உயர்வு நான்கு மடங்கு வரை...

இந்த விசயங்களை யோசிக்க மாட்டார்களா?

முதலில் அரசும் சரி எதிர்கட்சிகளும் சரி.. பொது மக்களும் சரி... ஒரு விசயத்தினை நன்றாக சிந்திக்க வேண்டும்...
ஊரக வேலை அளித்த அரசாங்கம்.. வேலை வாய்ப்பு இல்லாத பகுதிகளில் இந்த வாய்பினை அளித்திருக்க வேண்டும்... அதை விடுத்து சரியான திட்டமிடல் இல்லாமல்... தன் ஓட்டு வங்கி பற்றி மட்டுமே சிந்தித்து.. இந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினை அமல்படுத்தியது மாபெரும் முட்டாள் தனம்...

ஊரக வேலைக்கு போனால் தினசை 100... அப்படி இப்படி பொழுது போனா சரி எனும் ஒரு சோம்பேரித்தனத்தினை அவர்களுக்கு விதைத்து விட்டது...

விவசாய பணிகளுக்கு, ஆள்பற்றாக்குறை என்பது கடந்த சில ஆண்டுகாலமாக விவசாயத்திற்கு மாபெரும் பின்னடைவு... இதற்கு ஒரு தீர்வு காணாமல்... இருந்த வேலை ஆட்களையும் ஊரக வேலைவாய்ப்புக்கு அழைத்தது அரசு...

தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் தானே தவறு.. அதைவிட அப்போது கொடுத்தால் நம் காசை அல்லவா கொடுக்கணும்... என அரசு பணத்தினை இன்றே மக்களுக்கு கொடுக்க நினைத்து விட்டார்கள் போலும்...

இங்கே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டது... விவசாயி மட்டுமே... வேறு யாரும் இல்லை... அரசு ஊழியர்க்கும் சரி... தனியார் ஊழியருக்கும் சரி... அவர்களுக்கு சம்பளம் வராமல் இல்லை...ஊதிய உயர்வும் இல்லாமல் இல்லை...

ஆனால் விவசாயிகளுக்கு?..
எந்த ஊதிய உயர்வு கிடைக்கிறது.... மழை இல்லாமல் போனால்... இந்த ஆண்டில் விவசாயிக்கு ஏற்ப்பட்ட நிலை தான்... பஞ்சத்தாலும் பட்டினியாலும் விலைவாசி உயர்வாளும் பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகளும், விவசாயம் சார்ந்த நபர்களும் மட்டுமே...!!

விவசாயிகள் நலன் சிறந்து வாழ்வு செழித்தால் மட்டுமே இந்த விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த முடியும்... அது விடுத்து .இந்த ஆட்சியாளர்களாலும் சரி... எதிர்கட்சிகளே நாளை ஆட்சிக்கு வந்தாலும் இந்த விலைவாசி உயர்வினை தடுத்திட முடியாது...

நன்றாக யோசித்து பாருங்கள்... எதற்கெடுத்தாலும் இப்படி வேலை நிறுத்த்ம அறிவித்தாலும் ஆட்சி மாறினாலும் யாராலும் விலைவாசி உயர்வினை கட்டுபடுத்த முடியாது,,,

வேலைநிறுத்தம் அறிவித்து பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இந்த அரசியல்வாதிகளின் முகத்திரையை கிளிக்க யார் வரப்போகிராரோ?

இப்படி வேலைநிறுத்தங்கள் செயவதை விடுத்து.. தங்கள் சிந்தனைகளை விவசாயிகளின் நல்வழிக்கு பயன்படுத்தினால் மட்டுமே விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த முடியும்...

நம்மை முட்டாள்களலாக்கும் இது மாதிரியான... இல்லை இல்லை.. பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைய பாதிக்கும் இதுமாதிரியான வேலைநிறுத்தங்கள் தேவை இல்லாத ஒன்று...

மக்கள் நலன் என கூறுபவர்கள் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பது எந்த வகையில் நியாயம்...

...இது மாதிரியான வேலை நிறுத்தங்கள் அறிவிப்பதை தவிர்த்து அதற்கு என்ன செய்யலாம் என யோசியுங்கள்... அடுத்த மடலில் அரசியல்வாதிகள் அதிகரிக்கும் முட்டாள்கள்... இன்னும் கொஞ்சம் விளக்கமாய் அடுத்த மடலில் சொல்கிறேன்...

சனி, 3 ஏப்ரல், 2010

என் காலமும் காதலும் அவளுக்காக..... நான் முட்டாள்...

என் இதயம் சொல்லியது ... !!!
என் இதயம் அவள் என்று... !!!
என்னாலும் இதை உணர முடிந்தது..
ஆனால் அவள் இதை உணர்ந்தாளா... !!!
என்னால் இதற்கு பதில் காண முடியவில்லை.. !!!
கனவுகள் காத்திருக்குமா??
ஆனால் அவளுக்காக என் கனவு காத்திருக்கிறது... காரணம்...
என் உயிரே அவள் நினைவு என்பதனை உணர்ந்து கொண்டது ... !!1

காலம் என்பது காத்திருக்காது என்பார்கள்...!!!
ஆனால் என் காலம் அவள் காதலுக்காகவே காத்திருக்கிறது..
காத்திருக்கும் கணம் கூட சுகம் தான்..
அவள் நினைவில் தானே என் காலம்...!!! இதை
அவள் உணர்வது எக்காலம்.... !!!

நம்பிக்கை வெற்றி பெறும்.... !!!
நானும் நம்புகிறேன்... என்னோடு கரம் கோர்த்து
அவள் நடைபோடும் காலம் வரும் என....!!!
காத்திருப்பேன் அதுவரை.... அவள்
என்னோடு நடைபோடும் நாட்கள் குறித்த
கனவுகளோடு..... !!!

சித்திரம் அவள்... !!!
சிலம்பொலி அவள் குரல் என நான் அவளை
வர்ணிக்க வேண்டியது இல்லை... ஆம்
அவளுக்கு தெரியும்... என்
உயிரைவிட அவள் மேல் நான் வைத்துள்ள காதல்
பெரிதென நான் நினைப்பது.....!!!

சாதி எனும் சாக்கடையும்.....
தவறான காதலால் காதலை...
தவறென நினைக்கும் சமூகத்தின் பிரதிநிதிகளாய்
அவள் பெற்றோர்கள்.... என்ன செய்ய? ..... என
அவள் மனம் நினைக்கும்...
என்ன செய்ய...???

காதல் என்பது வெறும் உணர்வுகள் அல்ல...
காதல் ... மனம் சொல்லும் வார்த்தைகள்... கூட
அறிய முடியா வியாதி... !!!
என்னை காதலைப்பதாய் ஒருத்தி சொல்லிய நாள்...
காதல் இது தான் என நான் உணரவில்லை... இன்று
உணர்ந்தேன்... ஆம் நான் காதலிக்கும் போது ....!!!

வாழ்க்கையில் வசந்தம் வறுமையில்லாமல் இருந்தால்
அல்ல.... மனதில் வெறுமையில்லாமல் இருந்தால் தான்.....!!!
என் மனம் அவள் நினைவில் இன்று வசந்த வாழ்க்கை வாழ்கிறது... !!!
அவள் என் காதலை ஏற்காமல்... போய் விட்டால்...
வெறுமையில்... மனம் வாழுமா?
சொல்ல தெரியவில்லை... ஆனால்...
இதை அவள் உணர்வாள்...!!!

இதோ இதை நீங்கள் மட்டும் அல்ல
என்னவளாய் நான் நினைக்கும் என் அவளும் படிப்பாள்....
அவளுக்குத் தெரியும்....!!!
அவள் தான் இன்று என் இந்த வாழ்க்கை என்று...
ஆம்... நான் வாழும் இந்த வாழ்க்கை...
தனி மரமாய் இருந்த என்னை தோப்பாக்கிய
அவளுக்குத் தெரியும்...!!!
அவள் என்னோடு இருப்பாள் என்ற நம்பிக்கையில்...
நான் பெற்ற வெற்றி என்று.....!!!

என் காதலும் சரி...
என் காலமும் சரி...
என் அவளுக்காக மட்டுமே காத்திருக்கும்.... !!!
காத்திருப்பது அவளுக்காக....
என் வெற்றிகள் அவளுடையது...!!!
என் இந்த உலகமாய் அவள் மட்டுமே....!!!