ஞாயிறு, 11 நவம்பர், 2012

என்னதான் எழுத்துக்களை தட்டச்சிட்டாலும்...

என்னவெல்லாமோ சிந்தித்து வலைபக்கத்தினுள் எழுத நினைத்து வருடம் 3 கடந்து விட்டது....

காலம் செல்லும் வேகத்தில் புதுப் புது நட்புகள்... அவர்களின் வார்த்தைகளுக்கு மத்திப்பளித்து கடந்த காலங்களில் எழுதப்பட்ட பல பதிவுகளை நீக்கி விட்டு இப்போது மீண்டும் சிறு குழுவிற்குள் மட்டும் என் எழுத்துக்களை அடைத்து விடாமல் இந்த அகன்ற வலை உலக வாசகர்கள் அனைவரும் காணும் வண்ணம் மீண்டும் ...

தினம் தினம் நிகழ்வுகளின் சாராம்சத்தினையும், திரை விமர்சனங்களையும், நகைச்சுவை துணுக்களையும் தாண்டி இந்த மக்களின் விசாலமான பார்வைகளைப் பற்றி இனிவரும் பதிவுகளில் ...

என்னதான் எழுத்துக்களை தட்டச்சிட்டாலும்... பேனா கொண்டு எழுதும் திருப்தி மட்டும் இன்னும் இல்லை....

தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...