இருப்பதும் நிஜம் இல்லை என்பதும் நிஜம்...
பாடு பட்டு உழைத்து ஊருக்கு உணவளிக்கும் உழவன் நிலை இப்படி தான்...
ஏன் யாரும் இது பற்றி பேசத் தயங்குகிறீர்கள்...
காலம் கடந்த அனுபவம் என்று கதை பேசும் ஆட்கள் தான் அதிகம்....
உலகம் நான் சுற்றினேன்... கதையாய் எழுதினேன்... இதனால் யாருக்கு என்ன இலாபம்...
தன் கதை சொல்ல ஒரு சுயசரிதை படைக்கும் எண்ணத்தில் தான் பலரும்...
நேற்று நடந்தது இன்று நினைக்கையில் ஆனந்தமாய் இருக்கலாம் ..... ஆனால்...
நேற்றும் இன்றும் வறுமையில் வாழும் மக்களின் நிலை அறிந்ததில்லையா? இல்லை அறிந்தும்
நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுவேன் எனும் மனநிலையா????
ஏர்முனை தான் அவன் வேலை ... அவன் கையில் கணினி எதற்கு என்று குரல் கொடுக்கும் உத்தமர்களே...
உங்களுக்கு ஏர்முனை வேண்டாம் என்றால்.. எங்களுக்கும் ஏதும் வேண்டாம் ... ஏர்முனை தவிர...
நாங்கள் உழைப்பது எமக்கு மட்டும் அல்ல... உமக்கும் தான்... நீ காசு வாங்காமலா செய்கிறாய்.. என
நீ கேட்பது புரிகிறது... நான் காசு மட்டும் போதும் என நினைத்திருந்து
வேறு பணி செல்லத் துவங்கினால்... உன் கதி... உணவிற்கு என்ன செய்வாய்...
உலகம் விட்டு என்றோ சென்றிருப்பாய்..
உழவன் சொல் இன்று அல்ல.. என்றாவது ஒருநாள் உனக்கு வேதமாய் இருக்கும்...
அப்போது உணர்வாய்... உலகம் உழவர்கள் கையில் என்பதனை...
உலகம் சுற்று... இல்லை ஊரைச்சுற்று... அப்படியே... அப்பகுதி மக்களின் வாழ்வியலை
அறிந்து வா..? காசு பார்க்க நீ உலகம் சுற்றுகிறாய்... உன் புகழ் பரப்ப... எழுத்துக்களால்
அதனை அழங்காரம் செய்கிறாய்... இது உன் அகங்காரம் காட்டும் வகை ......
காலம் செல்லும்... அப்போது அந்த காலமும் சொல்லும்...
கனவுகள் அல்ல... இது... கற்பனையும் அல்ல...
கால்கள் வெடித்து.. கண்கள் கசங்கி காரிருள் வரையிலும் கழனியில்
வேலை... கஞ்சிக்கும் வழி இல்லை.. காலணா காசுக்கும் வழி இல்லை.. என கசங்கி நிற்கும்
மக்கள் வாழும் மண்ணில் வசந்தம் என பாடும் உமக்கு என்ன தெரியும்...
சுத்தும் பூமியில்... சுத்தம் பற்றி பேசுவதும்... ஊர் சுற்றுவதும்,..
சுற்றிய சுதந்திரத்தினை சுயபுராணம் பாடுவதும்.. இந்த வலையுலகில்
வானுயர்ந்து கிடக்கிறது,... வெறும் கதைகளும் கற்பனைகளும்...
பழைய கதைகளும்,காவியங்கள் ஆகி விடாது...
நீ எழுதும் வார்த்தைகள் பொழுது போக்காய் இருந்து விடக்கூடாது...
இந்த வலையுலகில் உன் வார்த்தைகள் குப்பைகளை சேர்த்துவிடக்கூடாது....
உயந்த நல்லெண்ணங்கள்... உன் வார்த்தைகளில் தெரியட்டும்...
உன் சொல் செல்லா இடம் ஏதும் இருக்காது...
இந்த உலகில் உணவு உடை இருப்பிடம் இம்மூன்றும் முக்கியம் என்பதனை நீ அறிவாய்..
ஆனால்... உணவும் உடையும் உழவனின் உழைப்பு என்பதனை என்று உணர்வாய்...
கயவர்கள் பின்னே செல்லும் அரசியல்... இல்லை.. கயவர்கள் மட்டுமே அரசு இயலாய்..
எப்படி இயலும் அரசு இயல்பாய்...
எந்த இடம் சென்றாலும் தன் புகழால் மயங்கிறவர் கிடக்கின்றார்..
இது குறித்தும் மக்களின் எண்ணங்கள் குறித்தும் தொடரும் மடல்களில் .... ...
நான் முட்டாள்....
சக்திவேல்...
வியாழன், 12 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)