செவ்வாய், 29 ஜூன், 2010

அடடா... இதுவல்லவா... அரசியல்.. மாநாடு நடத்துவார்கள்... அதில் பேசுவார்கள்.. அப்போது மட்டும் காற்று பலமாக வீசி தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கும்...

காலம் செல்லும் வேகத்தில்... நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம்...
இங்கே நாம் ஏமாற்றப்படுவது ஏதேனும் ஒரு வகையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது..
இதற்கு நல் உதாரணம்...

தமிழகத்தில் பரவலாக 3 மணிநேரம் இருந்த மின்வெட்டு 2 மணிநேரமாக குறைக்கப் பட்டது...
ஆனால்... கடந்த 23 முதல் மின் வெட்டு நிறுத்தப்பட்டு.. மின் வினியோகம் சீராக விநியோகிக்கப் பட்டது...
அனைவரும் செம்மொழி மாநாட்டினை காரணம் காட்டினர்...
ஆனால்.. எங்கள் வட்டார மின் பகிர்மான பொறியாளர்..பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்தார்... மின் சீரான விநியோகத்திற்கும் செம்மொழி மாநாட்டிற்கும் சம்மந்தம் இல்லை..
காற்று அதிகப்படியாக சீராக வீசுவதால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது... எனவே மின் விநியோகம் சீராக்கப் பட்டிருக்கிறது.. என்றார் அதில்..
இன்னொரு கொசுறு. எங்கள் பகுதியில் இரு முனை மும் முனை மின் மாற்றத்திற்காக மின்சாரம் நிறுத்தப் பட்டால்.. 1 நிமிடத்திற்கு பிறகே மின்சாரம் வரும் ஆனால்.. எரியும் விளக்கின் ஒளி மறைந்து இருள் பரவும் முன்பே மின்சாரம் வந்தது...

அட என்ன ஆச்சர்யம்.. தமிழக மின் துறையின் வளர்ச்சி கண்டு பெருமை கண்டேன்...
ஆனால்... செம்மொழி மாநாடு முடிந்த உடன் நேற்று முதல்.. மீண்டும் மின் வெட்டு ஆரம்பிக்கப் பட்டு விட்டது..
அடடா... இதுவல்லவா... அரசியல்..
மாநாடு நடத்துவார்கள்... அதில் பேசுவார்கள்.. அப்போது மட்டும் காற்று பலமாக வீசி தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கும்... மின்சாரம் சீராக கிடைக்கும்... அதுவே.. அவர்கள் பேச்சினை நிறுத்தி விட்டால்... காற்றும் நின்று விடும்.. மின்சாரமும் நின்று விடும்...
அடடா... இதுவல்லவோ மக்கள் பணி...
அதிகாரியும் கூட அரசியல்வாதி ஆகிவிட்டார் போல..

கேட்பவன் கேனயன் என்றால்... கேப்பையில் நெய் வடியும் என்று என் தாத்தா சொன்னதும்..
கேட்பவன் கேனயன் என்றால்... எருமை கூட ஏரோப்ளான் ஓட்டும் என்று சிறு வயதில் என் நண்பன் சொன்னது தான் நினைவிற்கு வருகிறது...

யார் கேனயன் முடிவு நம் கையில்...

வாழ்க இவர்களின் ஜனநாயகம்... வாழ்க இவர்களின் மக்கள் பணி... அட இதுவல்லவோ அரசியல்..

அண்ணாச்சி... நம்ம கலைஞர் வீட்டிலும் 2 மணி நேரம் மின் வெட்டு அமலுக்கு வருமா...?