செவ்வாய், 26 ஜனவரி, 2010

நான் புல்லாங்குழல்-ரம்யாசக்திவேல்........

நான் புல்லாங்குழல்-நான் முட்டாள்...........



குடியரசு தினம்...
கொடி ஏற்றி கொண்டாட வேண்டியதை குடி ஏற்றி கொண்டாடும்
மாணவர்கள்... எங்கே செல்லுது இந்தியா... வல்லரசாக மாற்றா விடினும் பரவாயில்லை...
இந்தியாவை நல்லரசாக்குங்கள் மாணவர்களே.... எனும் சில வரிகளோடு பல வரிகள்
உங்களை சிந்திக்க வைக்க....



குழந்தை தொழிலாளர்கள்......
என்ன சொல்வது ...
எத்தனை மூங்கில்கள்(குழந்தைகள்) இப்படி விறகாகி(குழந்தை தொழிலாளர்கள்) போகின்றதோ....
இந்த மூங்கில்
தங்களை புல்லாங்குழல் ஆக யாரும் மாற்ற மாட்டார்களா....?
என்று ஏங்கி நிற்கிறது...

வாழ்க்கை எனும் குடும்ப அடுப்பை எறிக்க இந்த மூங்கில்
தங்களை விறகாக்கி கொண்டு இருக்கின்றன....
காரணம் வறுமை...

மொட்டு மலரும் என காத்திருப்பது ஒரு சுகம்.....
இங்கே மொட்டுக்கள் கருகுவதை பார்த்து ரசிப்பதில்
சுகம் காண ஒரு கூட்டம்.......

மூங்கில்கள் இங்கே புல்லாங்குழல் ஆவதும் சரி....
விறகாவதும் சரி....
இதில் எது சரி....?
விடை உங்களிடம்...!!!


இங்கே மக்கள் வெறுமையை(வெற்றிடத்தை) தேடுகின்றனர்....
வாழ்க்கையில் அல்ல.......
தங்கள் வாழ்க்கையின் வறுமையில் வெறுமை வரவேண்டும்...
இந்த வறுமை நம் வாழ்வைவிட்டு செல்ல வேண்டும்
இப்படி கனவு காணக்கூட விடவில்லை இந்த வறுமை....

இந்த வறுமைதான் நான் சொன்ன முதல் வரிகளை மீண்டும் இங்கே நினைவு படுத்துகிறது....
ஆம்... புல்லாங்குழல் ஆக மாறவேண்டிய இந்த மூங்கில்கள்(குழந்தைகள்) விறகாக்கப்படுவது இந்த வறுமையின் வெற்றி தான்.....

வறுமையினை வென்றவனும் இருக்கிறான்....
நல்ல புல்லாங்குழல் தான் அவனும்....
ஆனால்... ஆனால் புல்லாங்குழல்
தனது இசையை வெளிப்படுத்த ஒரு புல்லாங்குழல்
வாசிக்கத்தெரிந்தவனை தேடிக்கொண்டிருக்கிறது
வேலை இல்லா திண்டாட்டம் தான்...
இந்த புல்லாங்குழல் இசையை யாரையும் ரசிக்க விடவில்லை....

இதைவிட இன்னொரு விசயம் இந்த இடைப்பட்ட தருணத்தில்.....

இங்கே... இருப்பதும் நிஜம் இல்லை என்பது நிஜம்...
ஆம்...
இங்கு எல்லாமே இப்படி தான்....

உணவு, உடை, இருப்பிடம்......
இவை மூன்றும் மனித வாழ்வில் அசைக்க முடியா அங்கம்- என
மூன்றாம் வகுப்பில் என் ஆசிரியை கற்றுக்கொடுத்த விசயம் ....
நினைவில் தான்.... இந்த மூன்றும் மட்டும் இருந்துவிட்டால் .... போதுமா....? உணவு அது எப்படி இருக்க வேண்டும்....

""குழந்தைகளுக்கு காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தி, உடல் உழைப்பையும், உடற்பயிற்சியையும் கட்டாயமாக்குவதன் மூலமே ஒரு நோயற்ற எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கி தர முடியும்'',

என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எங்கே செல்வது இவைகளை பெற....

இங்கே தான் நான் சொன்ன வரிகள் முழுமை பெறுகிற்து ...
இருப்பது நிஜம் இல்லை என்பது நிஜம் ...
ஆம்...
நல்ல உணவுகள் இருக்கின்றது... ஆனால்
ஊட்டச்சத்து இல்லை....
இந்த பற்றாக்குறை மூங்கில்களை விறகாகக்கூட பயன் அளிக்க விடுவதில்லை... ஆரோக்கியம் என்பது உண்ணும் உணவின் ருசியில் இல்லை....
என்பதனை உணரவேண்டும்.... என மருத்துவ்ர் சொன்னார்....
அவருக்கு தெரியாதா....? என என் மனம் நினைத்துது உண்ண உணவே இல்லை ஊட்டச்சத்தை பற்றி நினைப்பது எங்கே......?

எத்தனையோ விசயங்கள்.....
ஒருமனிதனின் வாழ்வை திசை மாற்றிப் போக வைக்கிறது...... அதில் முக்கியமானது தீண்டாமை....
தீண்டாமை ஒரு பாவ செயல் ...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்....
தீண்டாமை ஒரு பாவச்செயல்....
என நான் படித்த காலத்தில் எனக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது...
சாதி,இனம் பாராமல் நான் படித்தது....
சாதிகள் இல்லையடி பாப்பா....!!!!
நண்பன் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும் என் நண்பனை பற்றி...
அவன் சாதி பற்றி தெரியாது... தெரிந்துகொள்ளவும் நினைக்கவில்லை....நான்...
ஆனால்.... கடந்தது காலம்...
ஆசிரியை ஒரு நாள் சொன்னது எங்களை பிரித்தது...
ஆம் என் நண்பனை அழைத்து சொன்னார்...
உனக்கு அரசு சார்பா எழுத நோட்டு தருவாங்க....
அத வாங்கணும்னா... சாதி சான்று வேணும் உங்க அப்பகிட்ட சொல்லுனு... சொன்னாங்க... அவனும் ஏதும் சொல்லாமல் தலை ஆட்டினான்...
நான் ஆசிரியையிடம் கேட்டேன்.... இன்றும் மறக்கவில்லை... டீச்சர் எனக்கும் தருவீங்களா?,...
ஆசிரியை சொன்னது அன்று பெரிதாக தெரியவில்லை...
இன்று அந்த ஆசிரியை மேல் கோபத்தை வரவழிக்கிறது.
ஆம் அன்று அவர்கள் சொன்னது இன்று ஒரு சமூக ஆர்வலனாக என்னை சுடுகிறது... ஆசிரியை சொன்னது இது தான்...
அவன் ********(சாதி பெயர் சொன்னார் அது இங்கே மறைக்கப்பட்டுள்ளது).. அதான் கவர்ன்மெண்ட் அவனுக்கு தர்றாங்க... என்றார்...
அன்று நான் தலை ஆட்டினேன்...
இன்று தான் உணர்கிறேன்...
தீண்டாமை ஒரு பாவ செயல்...
என கற்பித்த ஆசிரியை, சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியின் கவியை கற்பித்த ஆசிரியை என் நண்பனை சாதியால் பிரித்து சொன்னது இன்னும் மனதில் ஒரு கோபத்தை ஒழித்து வைத்திருக்கிறது...
தீண்டாமை என்பது ஒழிக்கப்பட வேண்டும்...
இதனை எல்லோரும் நன்கு உணர வேண்டும்...
அப்போது தான் இந்த இந்தியா... வலிமை கொண்டதாக இருக்கும்...
தீண்டாமையை ஒழிக்க யாரால் முடியும் ...
வருங்கால துண்கள் என நம்மை வர்ணிக்கும் அரசியல் வாதிகளால் அல்ல.... நம்மால் தான் முடியும்...
அரசு பொருளாதார அடிப்படையில் சலுகைகளை வழங்கினாலே
தீண்டாமை ஒழிந்து விடும்...
அதை விடுத்து எத்தனை ஆண்டுகள் "தீண்டாமை ஒரு பாவசெயல்" என
பாடம் எடுத்தாலும் ஒழிக்க முடியாது.
ஒரு விசயம் தீண்டாமை ஒரு பாவச்செயல்
என கற்பிக்கும் அரசே தான் சாதி சான்றுகளை அளித்து
மக்களை பிரித்து வருகிறது என்பதனை நாம் உணர வேண்டும்.

தீண்டாமை என்பது உள்ளூர் பிரிவினைவாதம்....
நமக்கு இருப்பது ஒரு உலகம் ....
இந்த உலகத்தில் இருக்கும் நாம் இந்தியன்,அமேரிக்கன் என...
ஏன்... தமிழன்,கன்னடன் என பல பிரிவினைகளை சுமந்து கொண்டு தான் இருக்கிறோம்.....
இது தேவையான ஒன்றா சிந்தித்து பார்ப்பது நம் கடமை ...
சிந்திப்பது மட்டும் அல்ல சிந்திக்கவைப்பதும் நம் கடமை..

இந்த பிரிவினை வாதம் மட்டுமே..
இந்த உலகில் தீவிரவாதம், வறுமை, குழந்தை தொழிலாளர்கள்,
வேலையில்லா திண்டாட்டம் என அனைத்திற்கும் காரணம்...
இதனை எல்லோராலும் உணர முடிந்த உண்மை ஆனால்...
ஏன் உணர மறுக்கிறோம்...
சாதி எனும் பெயராலும்... மதத்தின் பெயராலும்
சம்பாதிப்பவர்களின் சுயநல எண்ணம் நம்மை சாதிக்குள்ளேயே இருக்க வைத்துவிட்டது....

இந்த குடியரசு தின நாளில்...
உங்கள் எண்ணத்தை வளமையாக்குங்கள்...
வறுமை......
குழந்தை தொழிலாளர்கள்.......
தீண்டாமை......
உணவு பற்றாக்குறை......
பிரிவினைவாதம்......
என எதுவும் இனி வேண்டாம்.....
மனிதம் மட்டுமே... போதும்... நான் இந்தியன் அல்ல... மனிதன் ...
என நீங்களும் உணருங்கள்...
மற்றவர்களுக்கும் உணர்த்துங்கள்.....
இன்னொரு சின்ன விசயம்...
நான் இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும்...
என் தோழி சொன்ன ஒரு விசயம் அவளுக்கு அது பெருமையாக இருந்தது... ஆனால் அது மற்றவர்களின் புன்னகையை இல்லை இல்லை 'புண்'னகை யை உணராததால் அது அவளுக்க்கு பெருமை. அது என்ன?
அவளது சகோதரிக்கு திருமணத்திற்கு ரூபாய் 70 ஆயிரம் செலவில் ஒரு புடவை எடுத்தார்கலாம்.. அது மட்டும் அல்ல
விருந்தில் பலவகை உணவுகளாம் சொல்லிக்கொண்டால் பெருமையாய் ....
வாழ்வில் ஒருமுறை தானே இப்படி செலவு செய்து திருமணம் செய்வது சந்தோசமாக இருக்கும் என்பது அவள் எண்ணம்...
இவர்கள் வாழ்க்கையில் ஒரு முறை தானே திருமணம்
என செலவு செய்கின்றனர்... ஆனால்...
வாழ்க்கையில் ஒரு முறை நல்ல உணவு கிடைக்காதா...
என ஏங்குபவர்கள் எத்தனை பேர்.... ஏன் ???
அதை நாம் உணர மறக்கிறோம்... இல்லை இல்லை மறுக்கிறோம்.....
விடை சொல்லிக்கொள்ளுங்கள்......

-நான்...
தமிழன் அல்ல...
இந்தியன்... அல்ல...
மனிதன்.

வறுமையில்.... சிக்காத மூங்கில் நான்....
இன்று புல்லாங்குழல் தான்.....
என்னை வாசிக்கத்தெரிந்தவர்கள் யாரும் இல்லை...
நான் வாசிக்கப்படவில்லை ஆனால்... இந்த
புல்லாங்குழல் வாசிக்கத்தெரிந்தவனை தேட வில்லை
புல்லாங்குழல் இசையை ரசிக்கத்தெரிந்தவனை தேடிக் கொண்டிருக்கிறது....

ரசிக்க தெரிந்தவனுக்கு புல்லாங்குழலை இசைக்கத் தெரியவில்லை எனினும்...
அதன் அருமையான இசையை பற்றி அறிந்தவனாக இருப்பான்.......



இந்த புல்லாங்குழல்.....

நான் முட்டாள்...

Copy right @ ssvel